தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.
இவர் 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.
இவருடைய பிறந்த நாளையே 1995ஆம் ஆண்டிலிருந்து உலக சாரணர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உள்ளது.
சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1941-ஆம் ஆண்டு மறைந்தார்.